V.Nishanthan

V.Nishanthan

ஓய்வாக ஒருவர்

தலை நகரின் காலை நேர பரபரப்புகளின் மத்தியில் வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்கு சிவப்பாக மாற மோட்டர் வாகனங்களின் வேகம் மெதுவாக ஓய என்முன் ஓரு வாகனம் ஓய்வடைந்தது அதிலும். வாகன ஓட்டுனர் உள்ளார் நடு ரோட்டில் பச்சை விளக்குக்காக காத்திருக்கிறார் அவரும் அவர் வாகனத்தில் ஓய்வாக அமர்ந்து இருக்கிறார் எழுத்து – வி.நிஷாந்தன் www.vnishanthan.com

எனக்கு ஒரு Doubt அது….

எங்கட ஊரில ஒரு வீட்டில ஒரு கறுத்த கொழுத்த பூனை வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சாம்பல் நிறத்தில் இரண்டு குட்டிகளும் ஒரு தனி கறுத்த குட்டியும் போட்டிருந்தது சாமி அறையில் இருக்கும் தேக்கு மர கட்டிலுக்கு பின்னுக்கு குட்டிகள் பிறந்து பதினைந்து நாட்கள் ஆகுது. அந்த பூனைக்கு இரண்டு நாளாக கொஞ்ச சாப்பாடும் கிடைக்கவில்லை,…

தயவுசெய்து பணம் செலுத்தவேண்டாம்.

A9 றோட்டில் கரந்தாய் என்று ஒரு இடம்அது பளையையும் இயக்கச்சியையயும் இணைக்கிறது.அங்கு கரந்தாய் குளம் என்ற ஒரு இயற்கை அழுகு கொஞ்சும் குளமும் அங்கு உள்ளது.அதற்கு எதிர்பக்கம் ஒரு இடம் உள்ளது. அங்கு மதியம் இலவசமாக சாப்பாடு வழங்குகிறார்கள். யாரும் போய் வயிராற சாப்பிடலாம்.சிவத்த அரிசி சோறு, பருப்பு பால் கறி, ஒரு அருமையான சாம்பார்.வெள்ளி…

வேற்றிலைக்கேணி பிள்ளையார் கோயில் பொங்கல்

பயணப்படுதல் எனக்கு பிடித்த ஒன்று அதிலும் சொந்த ஊருக்கு போவது ஒரு மகிழ்வான தரணம். புதுவருட கொண்டாட்டத்திற்காக எனது சொந்த ஊர் பருத்தித்துறைக்கு சென்றிருந்தோம். எங்களுக்கு இருண்டு வருடங்களுக்கு முன் ஒரு மகள் பிறந்திருந்தாள். ஒரு நேர்த்திக்கடன் வைத்திருந்தோம் வெத்திலைகேணி பிள்ளையார் கோயிலில் இந்த முறை அதை நிறைவு செய்ய நேரம் கூடி வந்திருந்தது. நானும்…

பருத்தித்துறை புதிய மரக்கறி சந்தை.

பருத்தித்துறையின் பஸ் தரிப்பிடத்தின் அண்மையில் உள்ள கடைத்தொகுதிகளுக்கு மத்தியில் முதலாவது மாடியில் அமைந்துள்ள மாடியின் மத்தியில் இவ்வளவு காலமாக இயங்கிவந்தது பருத்தித்துறை மரக்கறி சந்தை. முதலாவது மாடிக்கு பொருட்களை சுமப்பதில் சிரமம், பொருட்கள் வாங்க வருபவர்கள் அதுவும் வயதானவர்கள் மாடிக்கு ஏறவதில் சிரமம் என அது சம்பந்தமான பல சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது…

பருத்தித்துறை ஓடக்கரை அப்பதட்டி

நாம் படித்த காலங்களில் அதாவது 1998 – 2000 அப்ப தட்டிகள் பரவலாக எங்கள் ஊரில் காணப்பட்டன. பின்நேரங்களில் அப்பதட்டிகளை தாண்டி சென்றால் தோசை வாசம் மூக்கை துளைக்கும். அப்பத்தின் வாசம் பிடரியை பிடிக்கும். சம்பலின் வாசம் காதை பிடித்து சாதுவாக இழுக்கும். சயிக்கிளை நிறுத்தி மதிலோரத்தில் சாத்திவிட்டு சயிக்கிளில் சாய்ந்து அமர்ந்து கொண்டு றோட்டை…

கோட்டுவாசல் அம்மன் தேர்த்திருவிழா 2025, பருத்தித்துறை.

பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மாளுக்கு 2025 வைகாசி மாதத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா நிகழ்வு மற்றும் அன்னதான நிகழ்வில் இறை பணி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கோட்டுவாசல் அம்மாளின் மகிமைகளை பல பெரியவர்கள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அத்துடன் இந்தியாவில் இருக்கும் முக்கிய சில கோயில்களுக்கும் எமது கோட்டுவாசல் அம்மாளின் கோயிலுக்கும் ஆன்மீக அலைவரிசை தொடர்பு இருப்பதாக இந்தியாவில்…

கம்பளிப்பூச்சி

மண்ணுக்கு நச்சு உரம் போட்டுஎம் நெஞ்சில் அடித்தீர். புல்லுக்கு மருந்திட்டுஎங்கள் வயித்தில் அடித்தீர். உம் பிள்ளைகள் பிடித்து விளையாடவர்ணம் காட்ட நாங்கள் இல்லை இனிஉங்கள் சந்ததிகளுக்கு எங்களை காட்டுங்கள் பாடப்புத்தகத்தில் பதிவு செய்யுங்கள் எங்களையும்நாங்களும் உங்களுடன் வாழ்ந்தோம்கைகளில் தவண்டோம்என்று நீங்கள் வரலாறு எழுத.

கரும்பலகையும் , வெள்ளை சோக்கும்

சந்தித்து நாம் வெகுநாள் தொலை தூரம் சென்றுவிட்டோம் இனி சந்திக்க வாய்ப்பில்லை காலத்தின் வேகத்தில் காணாமல் போனோம் நாங்கள்; சேர்ந்திருந்த காலம் பொன்நிலவு பூத்தகாலம் இனியும் நாங்கள்; சேரலாம் காலம் பின்னோக்கி போகவேண்டும்; இனியும் நாங்கள்; வாழலாம் தொழில் நூட்பம் தொலையவேண்டும் கரும்பலகையே, என்னால் நீ வெள்ளையானாய் உன்னால் நான் குள்ளமானேன். நாம் இருவரும் ஒன்றாகி…

Hartley College A.G.M.

ஹாட்லிக்கல்லூரியின் பழையமாணவர்களின் Executive Annual Meeting வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். கிட்டதட்ட பெரும்பாலும் 90ம் ஆண்டிற்கு முன் ஹாட்டிலியில் கல்வி கற்றோரே அதில் கலந்துகொண்டிருந்தனர். அவரவர் செய்யும் தொழிலில் பாண்டித்தியம் பெற்றவர்கள். பல்வேறு தொழில் துறைகளில் உள்ளவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். சிலருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது…