இந்தியாவில் என் கண்ணையும் மனதையும் தொட்டவைகள்

  • ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் பிரதான பஸ் நிலையங்களில் பேரூந்துகள் நிரம்பி வழிந்து புறப்படுகின்றன.
  • மக்கள் சத்தமாகவே கதைத்கிறார்கள் ஒருவேளை இங்கு வாய் நீளமா அல்லது காது கட்டையோ புரியவில்லை.
  • தனியார் நிறுவனங்களிலும், தனிப்பட்ட சந்திப்புகளிலும் தனி மனித மரியாதை பொங்கிவழியுது. பேரூந்துகளிலும் பொது இடங்களிலும் அது நொண்டுகிறது.
  • தெருவரை நீண்டு முகம் காட்டும் சாப்பாட்டு கடைகளில் உணவுகளின் சுவையோ Five Star Hotel களை மிஞ்சுகிறது.
  • நாலு சக்கர தள்ளுவண்டிலில் வகை வகையான தோசையும் சுவையான சட்னியும், பஞ்சுபொல் இருக்கும் இட்லியும் சாம்பரும் ரெடியாகுது சுவை நாக்கை தூக்குது. வயிறு நிரம்பி ஏப்பம் வரும் வரை நகர மனம் மறுக்குது.
  • தெருவோர பழக்கடைகள் நடு இரவு வரை திறந்திருக்கிறது. கூட்டமும் இருந்து கொண்டுதான் இருக்குது.
  • வாகனத்தில் இருக்கும் Horn ஐ அடித்துக்கொண்டு ஓட்டுகிறார்களா இல்லை ஓட்டிக்கொண்டு அடிக்கிறார்களா தெரியவில்லை. Horn சத்தம் காதை பிளக்குது.
  • வாகனங்களும் மற்றும் தெருவோர சுவர்களும்; விளம்பரங்களால் நிரம்புது. தனி நபர் விளம்பரங்கள் அது தனி ரகம்
  • வாகனத்தின் முகப்பு கண்ணாடியைவிட வாகனத்தின் பெயர் பலகை அதற்கு மேல் பெரிதாக இருக்கு.
  • வாகனம் ஓட்டும் போது பாதைக்கு குறுக்க வந்தாலோ, அல்லது பிழையாக பக்கம் மாறி பயணித்தாலோ யாரும் முறைப்பதும் இல்லை அதை பெரிதாக அலட்டிக்கொள்வதாதவும் இல்லை.
  • மிகுதி பணம் ஒரு ரூபாய்க்கான சண்டை பேருந்துகளிலும், பலசரக்கு கடைகளில் (அங்கு மளிகை கடை) இந்தியா, பாகிஸ்தான் சண்டையையும் மிஞ்சுகிறது.
  • பரபரப்பு குறையாமல் சலிக்காமல் உட்காராமல் நின்றுகொண்டே உடுப்பு கடைகளில் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஓயாமல் வேலைசெய்கிறார்கள்.
  • சில முக்கிய பேருந்து நிலையங்களில் சிறுநீர் வாடை தான் முதலில் வரவேற்கிறது.
  • எங்கும் மஞ்சள் நிற ஓட்டோக்கள். மக்களை ஏற்றி செல்லும் எல்லா சாரதிகளும் காக்கி Uniform
  • பொலிசார் கூட கெல்மெட் அணிவதில்லை மோட்டார் சயிக்கிள் ஓடும்போது. (‘காக்க காக்க’ சூர்யாட்ட சொல்லவேணும்)
  • பஸ் கண்டக்டர்கள் கறாராகவும் முறைப்பாகவும் இருக்குpறார்கள். கனிவு என்பது சுத்தமாக இல்லை (எனக்கு எங்கட கொண்டக்டர் அந்தோனி அண்ணைதான் ஞாபகத்தில் வந்தார்)
  • இளநீர் கூட Door Delivery இல் கிடைக்கிறது.
  • பேரம் பேசும் திறமை எல்லாருக்கும் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. பெண்களிடம் அது பொங்கி வழிகிறது. ஐம்பது ரூபாய்க்காக அரைமணிநேரம் பேரம் பேசுகிறார்கள்.
  • கிட்டதட்ட எல்லோரும் அரசியல் ஆலோசர்களாக இருக்கிறார்கள். அரசியல் பேசியே உயிரெடு;க்கிறார்கள்.
  • சரவணாஸ் கடைக்கு சாமான் வாங்க போனேன் அங்கு சிறுநீர் கழிக்க Bathroom சென்றேன். அதற்கும் பெரும் கூட்டம் Line இல் நின்றது….. திரும்பி ஒடியே வந்துட்டன்.

சொர்க்கமே என்றாலும் நம் ஊரு போலவருமா….. பாட்டுத்தான் ஞாபகம் வருது.

நன்றி.

  - எழுத்து -
 வி.நிஷாந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *